மெக்சிகோ பெண்ணை  "பலமுறை".. வக்கிரம் பிடித்த "டிஜே".. அதிர்ந்து போன மும்பை!

Dec 02, 2023,05:58 PM IST
- மஞ்சுளா தேவி

மும்பை: தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் மேலாளர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

31 வயதான அந்தப் பெண், மும்பையில் வசித்து வருகிறார். இவர் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நபர் டிஜேவாக உள்ளார். அவருக்கு வயது 35. இந்த நிலையில் அந்த மேலாளர் தன்னை கடந்த 2019ம் ஆண்டு முதல் பலமுறை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து மும்பை போலீசார் மேலாளர் மீது பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான முறையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் அந்த நபரைக் கைது செய்தனர்.



விசாரணையின்போது, அந்த நபர், ஏற்கனவே பல பெண்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபத்தியதாக தெரிய வந்தது. முன்னதாக மெக்சிகோ நாட்டுப் பெண் கூறிய புகாரில், நான் தற்போது மும்பையில் வசித்து வருகிறேன். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலமாக அவரை சந்தித்தேன். தனது பந்த்ரா வீட்டில் வைத்து பல சந்தர்ப்பங்களில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

நான் மறுத்ததால் வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் என கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டி நெருக்கமான புகைப்படங்களை எடுத்தார். 2020 ஆம் ஆண்டு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகும் , எனக்கு ஆபாசமான படங்களையும், தகாத செய்திகளையும் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

news

Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

சிம்ம ராசிக்காரர்களே... பெயர், புகழ் அதிகரிக்கும் நாள்

news

ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்