பெங்களூரு: தேசியக் கல்விக் கொள்கை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனக்கெல்லாம் 8 மொழிகள் தெரியும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா எம்பியான சுதா மூர்த்தி.
இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவிதான் சுதா மூர்த்தி. மும்மொழிக் கொள்கை தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதற்குக் காரணம், இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களே.
இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சுதா மூர்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தவறு இல்லை. எனக்கெல்லாம் 7, 8 மொழிகள் தெரியும். இதனால் பல விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. எனது பிள்ளைகளுக்கும் இதையே நான் பரிந்துரைப்பேன். தேசியக் கல்விக் கொள்கை, குழந்தைகள் பல மொழிகளை கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது, வாய்ப்பளிக்கிறது என்றார் சுதா மூர்த்தி.
மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட இந்த்த திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி விட்டன. திமுக தரப்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு மீதான விமர்சனத்தை மறைக்கக் கூட பெரியார்தான் உதவுகிறார்.. விஜய் பலே அறிக்கை!
எல்லாமே பொய்.. மோகன்பாபு மீதான புகார்களை முற்றாக நிராகரிக்கிறேன்.. செளந்தர்யா கணவர் விளக்கம்!
செளந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லையா.. கொலை செய்யப்பட்டாரா?.. புதிய புகாரால் திடீர் பரபரப்பு
வத்தலகுண்டு அருகே அமையவிருந்த டோல்கேட்... அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி
புதுச்சேரி முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. மகளிர் உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!
கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!
என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!
குளுகுளு வானிலை.. தமிழ்நாட்டில் கனமழைக்கும், மிதமான மழைக்கும் வாய்ப்பு..!
{{comments.comment}}