கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் மரணம்.. யார்னு தெரியுதா இவரை?

Sep 02, 2023,12:41 PM IST

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் காலமானார். அவருக்கு வயது 94. இளவரசி டயானாவுடன் கார் விபத்தில் மாண்டு போனாரே டோடி அல் பயத்.. அவரது தந்தைதான் முகம்மது அல் பயத்.


இங்கிலாந்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் முகம்மது அல் பயத். எகிப்தைப் பூர்வீகமாக கொண்ட இவர் இங்கிலாந்தில் தனது கடினமான உழைப்பால் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ரியல் எஸ்ட்டேட், கப்பல் வணிகம், கட்டுமானத்துறை என சகல துறைகளிலும் ஆழமாக கால் பதித்தவர்.




இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் இவர் மிகப் பிரபலமான கோடீஸ்வரர் ஆவார். சாதாரண பிஸ்ஸி கூல்டிரிங்ஸ் வியாபாரியாகத்தான் இவரது வாழ்க்கை தொடங்கியது. தனது உழைப்பாலும், சாதுரியத்தாலும் மிகப் பெரிய கோடீஸ்வரராக மாறினார் முகம்மது அல் பயத்.


94 வயதான  முகம்மது அல் பயத், வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் மரணமடைந்தார். இவரது மகன் டோடி அல் பயத், இளவரசி டயானாவுடன் நெருங்கிப் பழகி வந்தார். இருவரும் பிரான்ஸில் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். மகன் இறந்து 26 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தந்தையும் காலமாகியுள்ளார்.


எகிப்தின் அலெக்சான்ட்ரியா நகரில் பிறந்தவர் முகம்மது அல் பயத். இவர் என்னதான் இங்கிலாந்தில் குடியேறி, இங்கிலாந்துக்குப் பெருமை தேடிக் கொடுத்தாலும் கூட அந்த நாட்டில் இவர் ஒரு "வந்தேறி"யாகத்தான் பார்க்கப்பட்டார். எத்தனையோ அவமானங்கள் வந்தன. ஆனாலும் அதையும் தாண்டித்தான் இவர் ஜெயித்தார்.


ஹாரோட்ஸ், புல்ஹாம், பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டல் ஆகியவை இவரது அடையாளங்களாகும்.  இங்கிலாந்து அரசு குடியுரிமை வழங்க மறுத்து பிரான்சுக்குப் போய் விடுமாறு பலமுறை மிரட்டியது. காரணம், பிரான்ஸ் நாடு இவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதை அளித்துக் கெளரவித்த காரணத்தால்.  தனது மகனும், டயானாவும் போன கார் விபத்துக்குள்ளாகவில்லை. அது இங்கிலாந்து ராஜ குடும்பம் செய்த சதியே, அவர்கள்தான் தனது மகனையும், டயானாவையும் கொலை செய்து விட்டதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டி உலகையே அதிர வைத்தவர் முகம்மது அல் பயத்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்