லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் காலமானார். அவருக்கு வயது 94. இளவரசி டயானாவுடன் கார் விபத்தில் மாண்டு போனாரே டோடி அல் பயத்.. அவரது தந்தைதான் முகம்மது அல் பயத்.
இங்கிலாந்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் முகம்மது அல் பயத். எகிப்தைப் பூர்வீகமாக கொண்ட இவர் இங்கிலாந்தில் தனது கடினமான உழைப்பால் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ரியல் எஸ்ட்டேட், கப்பல் வணிகம், கட்டுமானத்துறை என சகல துறைகளிலும் ஆழமாக கால் பதித்தவர்.
இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் இவர் மிகப் பிரபலமான கோடீஸ்வரர் ஆவார். சாதாரண பிஸ்ஸி கூல்டிரிங்ஸ் வியாபாரியாகத்தான் இவரது வாழ்க்கை தொடங்கியது. தனது உழைப்பாலும், சாதுரியத்தாலும் மிகப் பெரிய கோடீஸ்வரராக மாறினார் முகம்மது அல் பயத்.
94 வயதான முகம்மது அல் பயத், வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் மரணமடைந்தார். இவரது மகன் டோடி அல் பயத், இளவரசி டயானாவுடன் நெருங்கிப் பழகி வந்தார். இருவரும் பிரான்ஸில் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். மகன் இறந்து 26 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தந்தையும் காலமாகியுள்ளார்.
எகிப்தின் அலெக்சான்ட்ரியா நகரில் பிறந்தவர் முகம்மது அல் பயத். இவர் என்னதான் இங்கிலாந்தில் குடியேறி, இங்கிலாந்துக்குப் பெருமை தேடிக் கொடுத்தாலும் கூட அந்த நாட்டில் இவர் ஒரு "வந்தேறி"யாகத்தான் பார்க்கப்பட்டார். எத்தனையோ அவமானங்கள் வந்தன. ஆனாலும் அதையும் தாண்டித்தான் இவர் ஜெயித்தார்.
ஹாரோட்ஸ், புல்ஹாம், பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டல் ஆகியவை இவரது அடையாளங்களாகும். இங்கிலாந்து அரசு குடியுரிமை வழங்க மறுத்து பிரான்சுக்குப் போய் விடுமாறு பலமுறை மிரட்டியது. காரணம், பிரான்ஸ் நாடு இவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதை அளித்துக் கெளரவித்த காரணத்தால். தனது மகனும், டயானாவும் போன கார் விபத்துக்குள்ளாகவில்லை. அது இங்கிலாந்து ராஜ குடும்பம் செய்த சதியே, அவர்கள்தான் தனது மகனையும், டயானாவையும் கொலை செய்து விட்டதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டி உலகையே அதிர வைத்தவர் முகம்மது அல் பயத்.
மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே
தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!
எட்டயபுரத்தில்.. கர்நாடக சங்கீத மேதை முத்துசுவாமி தீட்சிதரின்.. 250 வது ஜெயந்தி விழா கொண்டாட்டம்!
கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 67,000த்தை கடந்தது!
ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு.. இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!
Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!
ரமலான்.. இஸ்லாமியர்களின் பெரு நாள், புனித நாள்.. சமூக நல்லிணக்கத்தின் திருநாள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 31, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}