புத்தாண்டுக்கு ரெடி ஆவோம்.. தமிழகத்தில்.. டிசம்பர் 30 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

Dec 25, 2023,05:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வட கிழக்குப் பருவ மழை பெரிய அளவில் பெய்து தீர்த்து விட்டது. இனி பெரிய மழைக்கான வாய்ப்பி இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு பெரும் வெள்ளப் பெருக்கு தமிழ்நாட்டின் வட கோடி மற்றும் தென் கோடி மாவட்டங்கள் சந்தித்து விட்டன.


இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தமிழக கடலோர பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்,  டிசம்பர் 28 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது


சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்