சென்னை: நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தலைவர் கமலஹாசன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்தக் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிட்டுள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜய் தொடங்கிய புதிய கட்சியை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நம்மவர். கமலஹாசன் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள, நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன். அவரது தீவிர ரசிகரும், அவர் மீது நிறைய அன்பு வைத்துள்ளவருமான விஜய் தற்போது கமல் பாணியில் அரசியலில் குதித்திருப்பது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரு தரப்பும் கை கோர்த்து அரசியல் பாதையில் நடை போடும் வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எட்டிப் பார்த்துள்ளது.
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்
என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!
{{comments.comment}}