"இந்தாங்க பிடிங்க.. கட்டடத்தை முடிங்க".. நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

Feb 15, 2024,05:09 PM IST

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலின் போது பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அப்போது, விஷால் ஒரு படி மேலே  போய் அந்த மண்டபத்தில் தான் எனக்கு திருமணம் என்றார். இதன்படி, நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 2017ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று செங்கல் எடுத்து வைத்தனர். 


தென்னிந்தி நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராய நகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டிடம் கட்டு பணி நடைபெற்று வந்தது. ஐந்து வருடம் கடந்துவிட்ட நிலையில்  திடீரென நிதி நெருக்கடி காரணமாக கட்டடப்பணி நிறுத்தப்பட்டது.  கட்டிடப்பணி மீண்டும் தொடங்க வேண்டும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நிதி திரட்டி வந்தனர். 




இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், விஷால், கார்த்தி மற்றும்  கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் காசோலையை வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்