டப்பிங் இல்லாமல் நேரடியாக பதில் சொல்வாரா பதுங்குகுழி பழனிச்சாமி.. அமைச்சர் செந்தில் பாலாஜி

Feb 16, 2025,03:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என்று பகிரங்கமாக மிரட்டியுள்ள மத்திய கல்வி அமைச்சரை டப்பிங் குரலில் இல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிச்சல் பதுங்கு குழி பழனிச்சாமிக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.


இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கை:


மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.


'தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்' என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.


தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள்.




வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?


சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குகுழி பழனிசாமிக்கு? 


அஞ்சு கட்சி அமாவாசை.. பத்து ரூபாய் தியாகி.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு.. ஜெயக்குமார் பதிலடி


இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும்.


எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யுமா? வெயில் வாட்டுமா?

news

புதிய கல்வி கொள்கை மகாராஷ்டிராவில் அமல்... இனி இந்தி மொழி பாடம் கட்டாயம்!

news

நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பொங்கிய முன்னாள் அமைச்சர்

news

போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!

news

தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம்.... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்வு!

news

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி.. தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை..!

news

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது.. தமிழக அமைச்சரவை கூட்டம்..!

news

அமெரிக்க வருமான வரியில் மாற்றம் : டிரம்ப்பின் புதிய நடவடிக்கையால் மக்கள் கலக்கம்

news

ஏன் தேவை மாநில சுயாட்சிக் குழு..? முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்து கடிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்