ஜாமீன் கொடுங்க..  உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையீடு!

Oct 10, 2023,02:30 PM IST

சென்னை:  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.


சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.




டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் நேற்று காலை உடல்நிலை பாதிக்கப்ட்டது. சிறையில் அவர் கீழே விழுந்து விட்டதாக கூறப்பட்டது.


இதையடுத்து புழல்சிறை காவலர்கள் அவரது நிலையை பார்த்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் பாலாஜிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பதை கால் மரத்துப்போய் உள்ளதாக கூறினர்.  ரத்த ஓட்டம் சரியாவதற்கான சிகிச்சைகளை வழங்கி பல டெஸ்டுகள் அவருக்கு எடுக்கப்பட்டது.


அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த பின்னர் நேற்று மாலை அவரை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார். இவரது வழக்கு  வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மறு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்