இலாகா இல்லாமல் பதவியில் நீடித்து வந்த.. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா

Feb 12, 2024,09:33 PM IST

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதங்களாக நீடித்து வந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை.




அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர். என்.ரவி அதிரடியாக நீக்கி நாட்டையே அதிர வைத்தார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் தனது முடிவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.


கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதாலும், இலாகா இல்லாத அமைச்சராக நீண்டகாலமாக நீடித்தால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் இதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரச்சினை செய்து விடக் கூடாது என்பதாலும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதை விட முக்கியமாக, அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை ஜாமீன் கிடைக்காது என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது  ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால்தான் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால், கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை அவர் நேரில் முடுக்கி விட வாய்ப்பு இருக்கும் என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. அது கொங்கு மண்டல திமுகவினருக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்