சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை களத்திற்கு வர சொல்லுங்கள். எங்களின் சாதாரண அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து தோற்கடித்துக் காட்டுகிறோம் என அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலைத்துறை முற்றிலும் ரத்து செய்யப்படும். கோயில் வருமானத்தை சீரழிக்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலையை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிற்க சொல்லுங்கள். அடிமட்ட தொண்டனை வைத்து நாங்கள் வெற்றி பெற்றுக் காட்டுகிறோம் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டு பேசி உள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் திருக்கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை கூடுவதும், நாளுக்கு நாள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும், எங்கு பார்த்தாலும் கோயில்களில் குடமுழுக்குகளால் தேவாரம், திருவாசகம், மணி ஓசை, ஆராதனை, நடைபெறுவதும், அவர்களுக்கு எப்படி வயிறு எரிச்சலை கிளம்பாமல் இருக்கும். ஆகவே அண்ணாமலை போன்றோர்கள் ஆன்மீகத்தை வைத்து அரசியலை நடத்தலாம் என எண்ணியவர்கள் இன்றைக்கு ஆன்மிகத்தை வைத்து அரசியல் நடத்துவதற்கு இடமில்லை என்பதால் இது போன்ற சொற்றொடரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
எங்கள் இயக்கத்தை பொறுத்த அளவில் அடிக்கடிக்க உயர்கின்ற பந்து இது. தீட்டத்தீட்ட ஒளி தருகின்ற பட்டை வைரம் இது. அதனால் அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும், எங்கள் இயக்கத்தினர் இன்னும் விறுவிறுப்புடன் வீர நடை போடுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். வர சொல்லுங்கள் பார்க்கலாம். தயாராக இருக்கிறோம்.
எங்கள் தலைவர் இன்றைக்கும் அறுதியிட்டு, உறுதியிட்டு நிமிர்ந்த நெஞ்சோடு ஏன்
இருமாப்பு செருக்கென்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். களத்திற்கு வர சொல்லுங்கள். சாதாரண அடிமட்ட தொண்டனை கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, என்று சொல்லும் அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து தோற்கடித்துக் காட்டுகிறோம் என பேசியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?
PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை
ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு
ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்
Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!
கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!
உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!
மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!
{{comments.comment}}