சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படவுள்ளனர்.
தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலமாகவே இப்பணிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு ஏதாவது ஒன்றைப் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் அனுபவம் வித்தியாசப்படும், வயது வரம்பும் வித்தியாசப்படும். ஒரே ஒரு தலைமைப் பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும். ரயில்வே அல்லது மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தது 25 வருட கால அனுபவம் இருக்க வேண்டும்.
பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்சம் 20 வருட கால அனுபவம் இருக்க வேண்டும். பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 45 ஆகும்.
மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.இ, பி,டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 38-க்குள் வயதுக்குள் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் பதவிக்கு 35 வயதும், உதவி மேலாளர் பணிக்கு 30 வயதும் உச்சவரம்பமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு அவசியமாகும்.
தேர்வு முறை:
தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் ஆகிய அனைத்துப் பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியுடையவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப் படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org/job-notifications/ இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}