டெல்லி: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மேலும் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாம்.
மெட்டா நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. அதன் 18 ஆண்டு கால வரலாற்றில் பெருமளவிலான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது அதுவே முதல் முறையாகும். இந்த பணி நீக்கத்திற்குப் பின்னர் 2022ம் ஆண்டு இறுதியில் மெட்டாவின் ஊழியர்கள் எண்ணிக்கை 86,482 ஆக இருந்தது. இது 2021ம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிலையில் தற்போது 2வது சுற்று ஆட்குறைப்பில் ஈடுபட மெட்டா முடிவு செய்துள்ளது. இந்த முறை 10,000 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவுள்ளனர். இந்த செய்தி வெளியானதுமே மெட்டா நிறுவன பங்குகளின் மதிப்பு 6 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. மேலும் 5000 புதிய ஊழியர்களை எடுக்கும் திட்டத்தையும் மெட்டா வைத்திருந்தது. அதையும் தற்போது ரத்து செய்து விட்டது. மேலும் பல புதிய திட்டங்களையும் கூட அது கைவிட்டுள்ளது.
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் ஜக்கர்பர்க் வெளியிட்டுள் அறிக்கையில், புதிய பொருளாதார சூழல் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். அதற்கு இந்த 2வது சுற்று ஆட்குறைப்பு உதவும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பெரிய வங்கிகள் திவாலாகி விட்டன. பொருளாதார மந்த நிலையை ஐரோப்பா எதிர்கொண்டுள்ளது. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் பொருளாதார சிக்கண நடவடிக்கையை தொடங்கி விட்டன. இதனால் ஆட்குறைப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை தகவல் தொழில்நுட்பத் துறையில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்பது சோகமான ஒரு புள்ளிவிவரம் ஆகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}