மார்கழி திருவெம்பாவை பாசுரம் 07 - அன்னே இவையும் சிலயோ பல அமரர்

Dec 23, 2023,09:24 AM IST

முதல் முறையாக பாட துவங்கும் மாணிக்கவாசகர், இறைவனின் அருளால் அவரைப் போற்றி பாடுகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வரும் தோழிகள், அப்படியே சிவ பெருமானின் பெருமைகளையும், அவரை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் சொல்வதைப் போல். உலக மக்களுக்கு சிவபெருமானின் அருளை பெறுவதற்கு என்ன வழி என்பதை எடுத்துரைக்கிறார்.





திருவெம்பாவை பாசுரம் 07 :


அன்னே இவையும் சிலயோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.


பொருள் :


தேவர்களாலும் அணுக முடியாத உலகிற்கே தலைவனாக இருக்கக் கூடிய சிவ பெருமானின் சின்னங்களை எங்கு பார்த்தாலும் உடனே சிவ சிவ என ஓடி வந்து விடுவாயே? தென்னானுடைய சிவனே போற்றி என எங்கு ஓசை கேட்டாலும் அந்த மொழியில் உடனடியாக உள்ளம் உருகி ஓடி வந்து விடுவாயே. அந்த சிவன் எனக்குரியன், என் தலைவன் என சொல்லிடுவாயே. இப்போது அந்த இறைவனின் பெருமைகளை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. இவை அனைத்தையும் கேட்டுமா உனக்கு தூக்கம் போகவில்லை.


விளக்கம் : 


ருத்ராட்சம், திருநீறு, சிவனடியார்கள் போன்ற சிவ சின்னங்களை எங்கு பார்த்தாலும் அதை சிவனின் அடையாளமாக கருதுவது சிவ பக்தர்களின் வழக்கம். சைவத்தில் குறிப்பிடப்படும் சிவ சின்னங்கள் வெறும் அடையாளங்களாக இல்லாமல், நம்மை காப்பதற்காக சிவன் அந்த பொருட்களின் வடிவில் இந்த பூலோகத்தில் இருக்கிறான். அவரை பாடி, உள்ளத்தில் நினைத்து, பக்தி செய்து, சிவனை நமக்குள் உணர வேண்டும் என்பதையே மாணிக்கவாசகர் இந்த பாடலில் உணர்த்துகிறார்.


சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்