மார்கழி திருவெம்பாவை பாசுரம் 06 - மானேநீ நென்னலை நாளைவந் துங்களை!

Dec 22, 2023,08:36 AM IST

திருவெம்பாவை பாசுரம் 06 : 


மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்




பொருள் :


மான் போன்று அழகாக துள்ளி ஓடும் பெண்ணே நாளை நான் வந்து உங்களை எழுப்புகிறேன் என்று நீ சொன்ன வார்த்தைகள் எங்கு போனதென்று தெரியவில்லை. எங்களிடம் சொன்னது கூட நினைவில்லாமல் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரே. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? விண்ணில் உள்ளவர்களும், பூமியில் வசிப்பவர்களும், இன்னும் தெரியாத உயிரினங்களும் கூட நெருங்க முடியாத நம்முடைய இறைவன் சிவ பெருமான் நமக்காக தானே வந்து அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் அருளை பெறுவதற்காக வானவர்கள் அவரை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவரை போற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். வந்து உன்னுடைய கதவை திற. நீ கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. நம்முடைய சிவனின் பெருமைகளை நாங்கள் பாடுவதை கேட்டு உள்ளமும், உடம்பும் உருகி விடுகிமே. உன் மனம் உருகாமலா இருக்கிறது என்கிறாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வந்த தோழி.


விளக்கம் :


இறைவனின் பெருமைகளை கேட்கும் போது கேட்பவரின் உள்ளம் பக்தியால் உருகி விட வேண்டும். இறைவன் நமக்காக அருள் செய்வதற்கு காத்திருக்கும் போது அவரை போற்றி பாடி, அவரின் அருளை பெறாமல் உலக ஆசைகளில், மாயைகளில் மனிதர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கும் போது நாம் இப்படி அறியாமை என்னும் தூக்கத்தில் சிக்கிக் கொண்டு இருப்பது சரிதானா என கூறுகிறார் மாணிக்கவாசகர்.


சமீபத்திய செய்திகள்

news

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கி.. பெங்களூரில் கைதான.. ஜானி மாஸ்டருக்கு 15 நாள் சிறை!

news

தமிழ்நாடு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உதவித் தொகை இருமடங்காக உயர்வு!

news

நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

அதிகம் பார்க்கும் செய்திகள்