Margazhi: மார்கழி மாதத்தில்.. அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும் தெரியுமா?

Dec 16, 2024,05:57 PM IST

நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும், அதற்கான முக்கியத்துவத்தையும் வகுத்து வைத்தார்கள். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு, கார்த்திகையில் சிவன், முருகன், ஐயப்பன் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு என வைத்தார்கள். ஆனால் மார்கழியில் மட்டும் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வது நன்மையை தரும் என வைத்தார்கள்.


மார்கழி மாத வழிபாடு :




மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசலில் கோலமிட வேண்டும் என்ற முறையையும் வகுத்தார்கள். மற்ற எந்த மாதத்திலும் இல்லாமல் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பாக சொல்லப்பட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. அறிவியல் ரீதியாக, மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஓசோன் படத்தில் இருந்து வரும் காற்று பூமியில் அதிகம் நிறைந்திருக்கும். இந்த காற்றினை நாம் சுவாசிக்கும் போது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.


மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோமிட வேண்டும். சாணம் நகரங்களில் கிடைப்பது அரிது. எனவே தண்ணீர் தெளித்து கோமிடுவது நம் உடலுக்கும், மனதிற்கும் அதீத நன்மை பயக்கும்.


நம் உடலில் 80 சதவீதம் ஆக்ஸிஜன், 20 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயும் இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய வாழ்க்கை மாற்றத்தால் பழக்க வழக்கங்களின் தவறுகளால் கூடுதலாகி விட்ட கார்பன் டை ஆக்சைடை விரட்டி ஆக்ஸிஜனை நம் உடல் பெறுவதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகும். இதனால் நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் தான் இந்த வாயுவை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.


சாதாரணமாக சொன்னால் நம் மக்கள் கடைபிடிப்பது கடினம். எனவே தெய்வத்தின் பெயரால் செய்ய வேண்டும் என்று கூறினால் தான் நாம் அதனை பின்பற்றுவோம் என நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்