திருவெம்பாவை பாசுரம் 02 :
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
பொருள் :
நாம் இரவு பகலாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், நான் ஜோதி மயமான சிவ பெருமான் மீது அளவில்லாத பாசம் வைத்துள்ளேன் என்று வீரமாக பேசுவார். இப்போது நீராடி விட்டு, அவரை வழிபட அழைத்தால் வராமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் தோழியர். அதற்கு வீட்டிற்குள் இருந்து பதிலளிக்கும் தோழி, ச்சீ...இது என்ன கேலி பேச்சு. கண் அயர்ந்து விட்டதற்காக இப்படி பேசலாமா? என்கிறாள். அதற்கு தோழியர்கள், தேவர்களும் கூட தேடி வழிபட முடியாத சிவனின் மலர் பாதங்களை காட்டி, நமக்கு அருள் செய்ய அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
சிவலோகத்தில் இருக்கும் அனைவரின் அன்புரிய இறைவன் தில்லை சிதம்பரத்தில் நடம் புரிபவனான ஈசனை காண்பதற்காக நாம் செய்ய வேண்டும் சீக்கிரம் வா என்கின்றனர்.
விளக்கம் :
தேவர்களும் கூட காண கிடைக்காதவர் சிவ பெருமான். அவர் நமக்கு அருள் செய்வதற்காக எப்போது தயாராக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது புரியாமல் உலக மாயையில், ஆசைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலக ஆசைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள, யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான இறைவனின் அருளையும், முக்தியை அடைவதற்கு இறைவனை சரணாகதி அடைய வேண்டும். அதுவே வாழ்வின் நோக்கம் என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்கிறார் மாணிக்க வாசகர்.
தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்
பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!
குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது
மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!
முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி
தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!
BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!
64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!
என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!
{{comments.comment}}