சென்னை: அதிமுகவுடன் கூட்டணியும் கிடையாது, கூட்டுப் பொறியலும் கிடையாது.. அவர்களுக்கு குர்பானி கொடுக்கப் போறேன் என்று இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் அதிரடியாக கூறியுள்ளார்.
இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கலும் செய்யவுள்ளார்.
18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதிமுகவுடன் பேசவும் செய்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மன்சூர் அலிகான் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்து விட்டார். வேலூரில் முகாமிட்ட அவர் அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார், பிரச்சாரத்திலும் இறங்கினார்.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் மன்சூர் அலிகான்.
கூட்டணியும் இல்லை, கூட்டுப் பொறியலும் இல்லை. தேர்தலில் தனியாக நிற்க போகிறேன். ஆனால் அதிமுக கூட்டணிக்கு குர்பானி கொடுக்கப் போகிறேன் என மன்சூர் அலிகான் அதிரடியாக பேசியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}