"அடப்பாவிகளா.. நான் ஏன் தலைமறைவு ஆகணும்".. ஆடியோ வெளியிட்டு வாய்ஸ் கொடுத்த மன்சூர் அலிகான்!

Nov 23, 2023,12:51 PM IST

- சங்கமித்திரை


சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதை மறுத்து தனது பிஆர்ஓ மூலம் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார் அவர்.


திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசப் போக அது பெரும் சர்ச்சையாக வெடித்து இப்போது வழக்கு, விசாரணை வரை வந்துள்ளது. இன்று அவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொண்டைவலி இறுமல் என்று கூறி நாளைக்கு வருவதாக சொல்லி அவர் காவல் நிலையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.


இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தலைமுறைவாகி விட்டதாக  சில செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்து அவர் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலமாக ஒரு ஆடியோ செய்தியை அனுப்பியுள்ளார்.




அதில் ஆன்டிசிபேட்டரி பெயில் என்பது நடைமுறை. முதலில் நுங்கம்பாக்கத்தில் வழக்கு பதிவு என்றார்கள். பிறகு ஆயிரம் விளக்கு என்று வந்தது. இதனிடையில் குற்றவியல் தடுப்புச் சட்டம் 41 ஏ படி காவல் அதிகாரி அம்மையார் அவர்கள் எனக்கு ஆயிரம்விளக்கிருந்து கடிதம் அனுப்பி இருந்தார்கள். இன்று ஆஜராக இருந்தது. ஆனால் தொண்டை வலி இருமல் என்று கூறி நான் பிறகு வருவதாக கூறி கடிதம் போட்டு விட்டேன்.


இந்த நிலையில் சிலர் எனக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மனுஷன், எத்தனை போன் தான் அட்டென்ட் பண்ணுவது. அதனால் சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். ஆனால் சுவிட்ச் ஆப் ஆனதை வைத்து நான் தலைமறைவாகி விட்டேன் என்று சந்தோஷப்படுகிறார்கள். அடப்பாவிகளா பூட்டுன ஆபீசை போட்டோ எடுத்து போட்டு மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக சந்தோஷ செய்தி பரப்புறீரீங்களே. தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சனை இருக்கு, எப்படியெல்லாம் திசை திருப்புறாங்க. நான் எதுக்குப்பா தலைமறைவாகனும். நான் என்ன நிஜமாவே யாரையாவது கற்பழிச்சிட்டேனா இல்லை கொலை பண்ணிட்டேனை. ஏம்ப்பா இப்படி ஆனந்தப் புளகாங்கிதம் அடையறீங்க என்று அதில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்