ஆஹா.. மறுபடியும் பஞ்சாயத்தைக் கூட்டும் மன்சூர் அலிகான்.. "சரக்கு" வசனத்தைக் கேட்டீங்களா?

Dec 01, 2023,06:05 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை:  மன்சூர் அலிகானின் சொந்தப் படமான "சரக்கு" திரைப்படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் "அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா?" என்னும் வசனம் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குனர் ஜெ ஜெயக்குமார் இயக்கத்தில் சரக்கு திரைப்படம்  டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இப்படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்துள்ளார். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. 90களில் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.


தற்போது டூ கே கிட்ஸ்களுக்கு பிடித்தது போல் காமெடி வில்லனாகவும் வலம் வருகிறார். வில்லன், காமெடியன், ஹீரோ,  அரசியல்வாதி என திரை உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையைக் கிளப்பவும் இவர் தவறுவதில்லை.




சரக்கு படத்தில் வலினா பிரின்ஸ் நாயகியாக  நடித்துள்ளார். அமைச்சர் நாஞ்சில் சம்பத் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளு சபா முஷா, மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் என பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.


தமிழ்நாட்டை பாடாய்ப்படுத்தும் மதுக் கொடுமையை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை, நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கியுள்ளனராம். சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.  அப்போது சரக்கு திரைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என கூறியிருந்தனர்.


சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து சர்ச்சை பேசியதாக , திரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டு நாடே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு மன்சூர் அலிகான் நான்  த்ரிஷா குறித்து பேசவில்லைல எனவும், கட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்கள் எனவும் கூறி வந்தார். இந்த செய்தி கடந்த ஒரு வாரமாக  பேசுபொருளாக இருந்து வந்து, மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு திரைப்படத்தில் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை  கிளம்பியுள்ளது.


நீண்ட ஆயுளை பெறுவதற்காக அரசனாகிய நான் உண்பதை விட எனது நண்பர் அவ்வையார் உண்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது என அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனியை பரிசாக அளித்தார்.இந்த செய்தியை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்..!


ஆனால், சரக்கு திரைப்படத்தில் "அமைச்சர்" நாஞ்சில் சம்பத் ஒரு காட்சியில் அதியமான் ஔவைக்கு சரக்கு ஊற்றி கொடுத்ததாகவும், சங்க காலத்தைத் தந்த தங்க காலத்தில் அவ்வையையும், அதியமானும் சேர்ந்து குடிக்கலையா என்றும் வசனங்களை பேசியுள்ளாராம். இதனால் பிரிவ்யூ காட்சி பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


டிசம்பர் மாசம் வெளியாகும் நிலையில் உள்ள சரக்கு திரைப்படம் வெளிவந்து என்னெல்லாம் சர்ச்சையை கிளப்புமோ என பலரும் பீதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்