"டிஸ்மிஸ்".. நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு .. சென்னை செஷன்ஸ் கோர்ட் அதிரடி உத்தரவு!

Nov 24, 2023,06:34 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.


லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு கோரியது தேசிய மகளிர் ஆணையம். 


இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆயிரம் விளக்கு  அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு  பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று தவறுதலாக குறிப்பிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்று பின்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.




இந்த மனு குறித்த விசாரணை நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து, திரிஷாவிற்கு எதிராக மன்சூர் அலிகான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. திரிஷா தரப்பில் இருந்தும் எந்த புகாரும் தரப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 


மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு மன்சூர் அலிகான் கட்டுப்படுவார் என்று கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவை ஒத்திவைத்திருந்தார். தற்போது மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக கூறியதைப் பதிவு செய்து கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி.


முன்னதாக திரிஷா குறித்துப் பேசிய பேச்சுக்காக அவர் திரிஷாவிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்