சென்னை: மணிப்பூர் முதல்வர் கையாலகாதவராக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியோ, அந்த மாநிலத்துக்கே போகாமல் தவிர்த்தார். ஆனால் நாங்கள் போனோம் என்று கூறியுள்ளார் திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது அனல் பறக்க விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.
திமுக சார்பில் டி.ஆர். பாலு பேசினார். அவர் பேசுகையில், மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள மக்கள் ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 143 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். 65,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி புலம் பெயர்ந்துள்ளனர். 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பொது இடத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். குழு பலாத்காரமும் செய்யப்டடுள்ளனர்.
மணிப்பூர் முதல்வர் கையலாகாதவராக இருக்கிறார். பிரதமர் நாடாளுமன்றத்துக்கே வருவதில்லை. மணிப்பூருக்கும் அவர் போகவில்லை. ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சியின் பிரதிநிதிகள் அங்கு சென்றோம். மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்டோம்.
பாஜக அரசு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு ஒரு உதாரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை என்று கூறினார் டி.ஆர்பாலு.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}