கொடுமை.. பலாத்காரம் செய்த சிறுமியை.. ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் நாசப்படுத்திய இளைஞர்!

Sep 10, 2024,05:04 PM IST

ரேவா:   17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ரேவா மாவட்டம்  கட்காரி கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பாண்டே என்பவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு அச்சுறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்தார்.




இந்நிலையில், கடந்த வாரம்  ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் அதே சிறுமியை கடத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு வேலைக்கு சென்று திரும்பிய அதே சிறுமியை அந்த இளைஞர் கடத்தியுள்ளார். ஒரு மாதமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து செப்டம்பர் 2ம் தேதி ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.


குற்றம் சாட்டப்பட்ட பாண்டே என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்