சிங்கப்பூர்: மலேசியாவைச் சேர்ந்த 45 வயது தமிழர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, 74 வயது பெண்ணின் கால் நசுங்கியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தமிழரின் பெயர் குணசீலன் சுப்ரமணியம். இவர் சிங்கப்பூரில் பஸ் டிரைவராக இருக்கிறார். சம்பவத்தன்று பஸ்ஸை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பஸ்ஸை எடுத்துள்ளார். அப்போது 74 வயதான துமினா சபி என்ற பெண் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். பஸ் வேகமாக எடுக்கப்பட்டதால் தடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவரது கால் பலத்த சேதமடைந்தது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு கால்களிலும் முழங்காலுக்குக் மேலே பலமாக சேதமடைந்திருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்ட்ட சுப்ரமணியத்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் உரிமம் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு அவர் சிங்கப்பூரில் எந்த வாகனத்தையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு 3 வார சிறைத் தண்டையும் வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாகவும், செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}