வயநாடு மக்களுக்கு ரூ.3 கோடி நிவாரண உதவி... பள்ளிக் கூடம் கட்டித் தருவதாகவும்.. அறிவித்த மோகன்லால்!

Aug 03, 2024,04:20 PM IST

கொச்சி : கடும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் வயநாடு பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ரூ.3 கோடி நன்கொடை வழங்குவதாக மலையாள நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


ஜூலை 30ம் தேதி கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுண்டக்கை, சூரன்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் வாழ்ந்த நூற்றக்கணக்கான மக்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை 364 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் மண்ணிற்குள் புதைந்துள்ளதாக சொல்லப்படும் 250க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.




நிலச்சரிவு நடைபெற்ற வயநாட்டிற்கு இன்ற நேரில் சென்று பார்த்த நடிகர் மோகன்லால், வயநாடு புனரமைப்பு பணிகளுக்காக விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். இதுவரை இப்படி ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதே இல்லை எனவும் மோகன்லால் வேதனை தெரிவித்துள்ளார்.


மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகளுக்காக ரூ.3 கோடியை நாங்கள் வழங்குகிறோம். தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் நன்கொடை வழங்க தயாராக உள்ளோம். இந்தியாவில் இது போன்ற மோசமான பேரிடரை இதுவரை சந்தித்தது கிடையாது. இழந்ததை மீண்டும் கொண்டு வர முடியாது. அதனால் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனி எப்படி உதவலாம் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். 


கொட்டும் மழை, இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஏராளமான மண் உள்ளது. இன்னும் மண்ணிற்குள் இருப்பவர்கள் உயிருடன் இருப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது. எத்தனை அடி ஆழத்திற்கு மண் புதைந்துள்ளது என்பது தெரியவில்லை என்றார்.


நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரன்மலை, முண்டகை கிராமங்களுக்கு சென்று பார்வையிட்ட மோகன்லால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரையும் சந்தித்து பேசினார். நடிகர் மோகன்லால் இந்தியா பிராந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கெ்ானலாகவும் இருந்து வருகிறார். ராணுவ உடையில் சென்று அவர் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்