சமஸ்கிருதத்தை  இந்தியாவின் அலுவல் மொழியாக்கலாமே.. கூறுகிறார் எஸ்ஏ பாப்டே

Jan 28, 2023,11:27 AM IST
நாக்பூர்:  இந்தியாவின் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்கலாம் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.



இந்திய அரசியல் சாசனனத்தின்படி நமது நாட்டுக்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை. அலுவல் மொழியாக தமிழ், இந்தி உள்ளிட்ட 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் உள்ளன. அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.

சமஸ்கிருத பாதி என்ற அமைப்பின் சார்பில் நாக்பூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பாப்டே பேசுகையில் இப்படி சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

சமஸ்கிருதத்தை நாட்டின் அலுவல் மொழியாக்க வேண்டும்.  நீதிமன்றங்களிலும் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கலாம். சட்ட மேதை அம்பேத்கரே கூட இதைப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் நிறைய உள்ளன.

இந்தியும், ஆங்கிலமும் தற்போது அரசு நிர்வாகம், நீதிமன்றங்களில்  அலுவல் மொழிகளாக உள்ளன. சில மாநி உயர் நீதிமன்றங்கள், மாவட்ட கோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கும் வசதியும் தற்போது வந்து விட்டது.

அலுவல் மொழி என்பது ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை என்று நான் கருதவில்லை. 1949ம் ஆண்டிலேயே அம்பேத்கர் ஒரு யோசனையைச் சொல்லியுள்ளார். எனவே அதைப் பரிசீலிக்கலாம்.  சமஸ்கிருதம் பல்வேறு மொழிகளுக்கு மூலமாக உள்ளது. எனவே அம்பேத்கர் சொன்னது போல நாம் ஏன் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

சமஸ்கிருதம் என்பது வட இந்தியாவுக்கோ அல்லது தென் இந்தியாவுக்கோ உரிமையானதல்ல.  இது மதச்சார்பற்ற மொழி. கம்ப்யூட்டர்களுக்கும் இது பொருத்தமான மொழி.  இதை நாசா விஞ்ஞானி ஒருவரே கூறியுள்ளார். 

நாட்டில் 43.63 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள். ஆங்கிலம் 6 சதவீதத்தினர் மட்டுமே. அதிலும் ஊரகப் பகுதிகளில் அது 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. பணக்காரர்களில் 41 சதவீதம் பேர் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஏழைகள் மத்தியில் இது 2 சதவீதமாக உள்ளது. சமஸ்கிருதம், எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளுடன் இணைந்து சமஸ்கிருதமும்  பயணிக்க முடியும் என்றார் பாப்டே.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்