பாகிஸ்தானில் திடீர் மின் தடை.. இஸ்லாமாபாத், கராச்சி,லாகூர் ஸ்தம்பிப்பு

Jan 23, 2023,01:55 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.35 மணிக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தேசிய  மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன.

மின்விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி 7.34க்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. 

சில ஊர்களில் மின் விநியோகம் சரியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு மின்சாரம் சரியாக வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.  அரை கரண்ட்டாக வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்