பணிப்பெண் சித்ரவதை வழக்கு.. திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு சிறைக்காவல்

Jan 26, 2024,06:12 PM IST

சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா. திருவான்மியூரில் உள்ள இவர்களது வீட்டில் ஒரு பெண் வேலைக்காக சேர்ந்துள்ளார். ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவரும் அந்த பெண்ணை வெளியில் விடாமல், தொடர்ந்து வேலை வாங்கி வந்ததாகவும், அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.


இந்நிலையில்,  ஆண்டோ மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில்  நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் தன்னை நிர்வாணப்படுத்தி, உடலில் சூடுபோட்டு, கரண்டியால் மார்பில் அடித்ததாக அவர் கூறியிருந்தார். விசாரணைக்குப் பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.




நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனைக்கு பின்னர் எம்எல்ஏவின் மகன் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் கடந்த 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க மூன்று தனி படை அமைக்கப்பட்டது.


தனிப்படை பிரிவினர் விசாரித்ததில் இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. ஆண்டோ  மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர்  காவல் நிலையத்திற்கு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்