கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரினாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் இன்று தனது கட்சி சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் அதிரடியாக அறிவித்தார் மேற்கு வங்க முதல்வரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
கொல்கத்தாவில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் 42 வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் மமதா பானர்ஜி.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி போட்டியிடுகிறார். கிரிக்கெட் இரட்டையர்களான பதான் சகோதரர்களில் மூத்தவர் யூசுப். இளையர் இர்பான் பதான் என்பது நினைவிருக்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு சகோதரர்களும் ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த நாடாளுமன்றத்தில் அதிரடி எம்.பியாக வலம் வந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகவும், நாடாளுமன்ற இமெயில் வசதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார் மமதா பானர்ஜி. மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மமதாவின் தம்பி மகன் அபிஷேக் பானர்ஜிக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் டயமன்ட் ஹார்பர் தொகுதியல் போட்டியிடவுள்ளார். அசன்சோல் தொகுதியில் நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி.
இளம் தலைவரான தேபங்ஷு பட்டசார்யாவுக்கு தம்லுக் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரபலத்தைத் தேடிக் கொடுத்த கேலோ ஹோபே பிரச்சாரத்தை வடிவமைத்தவர் இவர்தான்.
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்
என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!
{{comments.comment}}