மதுரை: மதுரையில் வருகிற மே 12ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது. வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. சித்திரைத் திருவிழா என்பது சைவ மற்றும் வைணவ மதங்களின் கூட்டுத் திருவிழா என்பதுதான் விசேஷமானது. மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவுடன், அழகர் கோவில் கள்ளளழகர் விழாவையும் இணைத்துக் கொண்டாடுகிறார்கள்.
மதுரையின் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைப் பார்க்க அண்ணனான அழகர் புறப்பட்டு வருவதாகவும், அவர் வருவதற்குள் கல்யாணம் நடந்து விடுவதால் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் அப்படியே ஆற்றங்கரையோரமாகவே அழகர் மலைக்கு அவர் திரும்பியதாகவும் ஐதீகம். இந்த இரண்டையும் இணைத்துதான் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அன்று லட்சக்கணக்கானோர் வைகை ஆற்றில் கூடுவார்கள் என்பதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?
Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!
தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!
அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!
Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?
கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!
{{comments.comment}}