"பாசிச பாஜக ஒழிக" என கோஷமிட்ட மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து

Aug 16, 2023,01:03 PM IST
மதுரை: தமிழ்நாடு பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பதவி வகித்தபோது, அவர் முன்பு பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.

2018ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தார் டாக்டர் தமிழிசை.  அந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் பயணித்தவர் ஆராய்ச்சி மாணவி சோபியா. இவர் தமிழிசையைக் கண்டதும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாசிச பாஜக ஒழிக என்று அவர் கோஷமிட்டதைக் கண்டித்து டாக்டர் தமிழிசை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



பின்னர் தூத்துக்குடிக்கு விமானம் வந்ததும் டாக்டர் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் சோபியா. இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றக் கிளை இன்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சோபியா மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகள் பொருத்தமற்றவையாக உள்ளதாக கூறி நீதிபதி தனபால் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்