மதுரை: நீட் தேர்வை எதிர்த்து இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. இன்றைக்குப் பதில் 23ம் தேதி அங்கு உண்ணாவிரதம் நடைபெறும்.
நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் மதுரையில் உண்ணாவிரதம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்று அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் திமுகவின் போராட்டம் நடைபெற்றால் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதால் மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. மாறாக ஆகஸ்ட் 23ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு விலக்கு கோரியும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}