மதுரை: மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் அக்டோபர் 29ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து கொழும்பிற்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை மதுரையிலிருந்து கொழும்புவிற்கு வாரம் ஐந்து நாட்களுக்கு விமான சேவை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
தற்போது செவ்வாய் மற்றும் வியாழக் கிழமையை தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் மதுரை டூ இலங்கை இடையே ஏற்கனவே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்க நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வரும் விமான சேவை தற்போது மேலும் ஒரு நாள் அதிகரித்து ஆறு நாட்கள் இயக்க ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து வாரத்திற்கு ஆறு நாட்கள் மதுரை டூ இலங்கை இடையே விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களும் மதுரை டூ ஸ்ரீலங்கா இடையே விமான சேவை அக்டோபர் 29 முதல் இயக்கப்படுவதாக அதிகார அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}