மதுரை: மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நக்கீரர் மற்றும் பெரியார் நுழைவாயில்களை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள அலங்கார நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த இரண்டு நுழைவு வாயில்களும் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் போன்றவை முந்தி செல்ல அலங்கார வளைவுகளின் ஓரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே இதை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், சுந்தர மோகன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மதுரை மாநகராட்சி தரப்பில் நுழைவு வாயில்களை அப்புறப்படுத்துவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை நகர் பகுதியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதன் நினைவாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
அதேபோல கேகே நகர் பகுதியில் பெரியார் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலங்கார நுழைவு வாயில்கள் கட்டப்பட்டன. தற்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகமாகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விட்டன.
இதனால் இந்த இரு நுழைவு வாயில்களின் தூண்களும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே அமைந்துள்ளது. இத்தகைய தூண்களை பலர் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு உள்ளாக இரு நுழைவு வாயில்களையும் அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நுழைவு வாயில்களை அமைத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்
பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!
குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது
மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!
முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி
தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!
BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!
64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!
என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!
{{comments.comment}}