மதுரை விமான நிலையம்.. ஏப்ரல் 1 முதல் "24*7"..  சு. வெங்கடேசன் நன்றி!

Jan 13, 2023,11:10 AM IST
மதுரை: மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று மத்திய இந்திய விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் சென்னை,  திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில்  உள்ள விமான நிலையங்கள் வர்த்தக ரீதியாக முக்கியமானவையாக திகழ்கின்றன.  இதில் சென்னை, திருச்சி,  கோவை விமான நிலையங்கள் 24 நேரமும் இயங்கி வருபவையாகும்.  ஆனால் மதுரை விமான நிலையம் பகல் நேரத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.

ஆனால் சமீப காலமாக மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவிலான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எனவே இரவு நேர விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மட்டுமல்லாமல், அகர்தலா, இம்பால், போபால்,  சூரத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புதியஅறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்