சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் சங்கத்திற்கு கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நிர்வாகிககளின் பதவிக்காலம் முடிந்தும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அதே நிர்வாகிகள் விதிகளுக்கு முரணாக செயல்ப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த செப் 27ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின்
தலைவராக என்.எஸ் ரேவதியும், துணை தலைவராக ராஜலட்சுமியும், செயலாளராக பர்வீன், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}