மக்களே விரல் ரெடியா.. 10,214 ஸ்பெஷல் பஸ்கள் தயார்.. சந்தோஷமா ஊருக்குப் போய் ஓட்டுப் போட்டுட்டு வாங்க

Apr 16, 2024,06:08 PM IST

சென்னை: சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கு  சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 10,214 சிறப்புப் பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்து வருகிறது.


ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  அதே நாளில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. அதன் பிறகு 18ம் தேதி ஓய்வு நாளாகும். 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன்4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.


இந்த நிலையில் சென்னையில் வசிக்கும், அதேசமயம், ஓட்டுகளை சொந்த ஊரில் வைத்துள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணப்பட ஆரம்பித்துள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் போக முயன்ற பலர் பஸ்கள் சரிவரக் கிடைக்காமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள் என்பது நினைவிருக்கலாம். அந்த சிரமம் இந்த முறை வந்து விடக் கூடாது, ஓட்டு போடாமல் மிஸ் ஆகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் பலர் இப்போதே சொந்த ஊர்களுக்குக் கிளம்பி வருகின்றனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகமும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு சவுகரியமான முறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல்:


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 2970 சிறப்பு பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7154 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3060 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 1825 சிறப்பு பேருந்துகளும் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2295 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 8034 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்