சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி உத்தேசமாக 21 தொகுதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை தற்போது காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கியுள்ளன. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக, முதல் கட்சியாக காங்கிரஸை அழைத்து இன்று பேசியுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழுவும், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டன. அவை - திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகியவை. இதில் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதற்குக் காரணம், தென் மாநிலங்களில் தங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக சீட்களை அள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.
ஏற்கனவே போட்டியிட்ட 9 தொகுதிகளுடன் மேலும் 12 தொகுதிகளையும் சேர்த்து 21 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கான உத்தேசப் பட்டியலையும் காங்கிரஸ் குழு, திமுக குழுவிடம் தரவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் (தனி), தென் சென்னை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகியவையே அவை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சி மறுப்பு
இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில், 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுக்க விரும்புகிறோம் என்று அக்கட்சி சார்பில் ஆர். கோபண்ணா மறுப்பு வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}