சசிகாந்த் செந்திலுக்கு லோக்சபா சீட்.. செம வியூகம் வகுத்த காங்கிரஸ்.. சூப்பர் ஸ்கெட்ச்!

Mar 24, 2024,05:01 PM IST

சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட வார் ரூமின் தலைவராக செயல்பட்ட சசிகாந்த் செந்திலை தமிழ்நாட்டு லோக்சபா தேர்தலில் களம் இறக்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.


வழக்கமாக பழம் பெரும் தலைவர்களுக்கே சீட் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அதில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்தார். புது ரத்தம் மற்றும் இளையவர்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகளை அவர் கொடுத்தார். இது பல பழைய காலத்துத் தலைவர்களுக்குப் பிடிக்காமல் போனதால்தான், வரிசையாக ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்லி வெளியேறினர். 




ஆனாலும் இதை ராகுல் காந்தி பெரிதுபடுத்தவில்லை. மாற்றம் வரும்போது இப்படித்தான் எதிர்ப்பும் கூடவே வரும் என்பதால் இந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலும் கடந்த லோக்சபா தேர்தலில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர் என பலர் அறிமுகமானார்கள். இவர்களின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தன, கவனம் ஈர்த்தன.


இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு படி மேலே போய், அறிவார்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆரம்பித்து அசத்தியுள்ளது காங்கிரஸ். தமிழ்நாட்டில் இந்த முறையும் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். அதில், ஏழு வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது. இதில் பெரிய அளவிலான ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒரே சர்ப்ரைஸ் என்னவென்று பார்த்தால், திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர்தான்.  கடந்த முறை இங்கு ஜெயக்குமார் போட்டியிட்டு வென்றிருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளிலும் புதுவையிலும் போட்டியிடுகிறது. இதில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தனர். நேற்று இரவு ஏழு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.


அதன்படி கரூரில் மீண்டும் ஜோதிமணி போட்டியிடுகிறார். விருதுநகரில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களத்தில் நிற்கிறார். கன்னியாகுமரி எம்பியாக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளராக செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். கடலூர் தொகுதியில் எம் கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டவராவார். தற்போது இந்தத் தொகுதியில் திமுகவே போட்டியிடுகிறது.  கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் களம் காண்கிறார்.


ஏழு வேட்பாளர்களில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்கள் மட்டுமே புதியவர்கள். மற்ற அனைவருக்கும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த பெயர்களும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்