தனக்கு 25.. கூட்டணிக் கட்சிகளுக்கு 15.. அதில் 5 தொகுதிகளில் "இலை".. அதிமுக கூட்டணி இறுதியானது?

Mar 03, 2024,05:43 PM IST

சென்னை: அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். இது திமுக போட்டியிடுவதாக கூறப்படும் தொகுதிகளை விட அதிகமாகும்.


தமிழ்நாட்டில் தற்போது திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் உருவாகின்றன. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் இப்போதைக்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஏதாவது  கூட்டணியில் இணைந்தால் நான்கு முனையாக இது நீடிக்கும். ஒரு வேளை மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டால், 5 முனைப் போட்டியாக அது மாறும்.


இதுதவிர அமமுக, ஓ.பி.எஸ் ஆகியோரின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. அனேகமாக பாஜக கூட்டணியில் இவர்கள் இணையலாம். அதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள்.


இதற்கிடையே, அதிமுகவில் யாருக்கு எத்தனை சீட் என்ற விவரம் லீக்காகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல்கதான்.. ஆனால் இப்படித்தான் கூட்டணி இருக்கும் என்று நம்பப்படுகிறது. 




இதன்படி அதிமுக புதுச்சேரி உள்ளிட்ட 25  தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். (திமுக 20 அல்லது 21 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று ஏற்கனவே ஒரு டாக் உள்ளது). இதுதவிர கூட்டணிக் கட்சிகளான எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி, புரட்சி  பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மயிலாடுதுறை, தென்காசி (தனி) தொகுதி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு அளிக்க அதிமுக தீர்மானித்துள்ளதாக சொல்கின்றனர்.


இந்த ஐந்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதன்படி பார்த்தால் இரட்டை இலை சின்னமானது 30 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ளது.


இதுதவிர பாமகவுக்கு 6 முதல் 7 தொகுதிகள் வரையும், தேமுதிகவுக்கு 3 முதல் 4 தொகுதிகள் வரையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம். இந்த இரு கட்சிகளுக்கும் ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லையாம். காரணம், அதிமுகவிடம் அதற்கான பலம் இல்லை என்பதால்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்