சென்னை: நடிகர் விஜய் திடீர் என இன்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தியுள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமீபகாலமாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், கட்சி நிர்வாகிகளை வைத்து அன்னதானம் அளித்தல், நூலகம் அமைத்தல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமீபகாலமாக செய்து வருகிறார்.
மேலும், லியோ பட வெற்றி விழாவில் விரைவில் அரசியில் பயணம் தொடங்க உள்ளது குறித்து பேசியது உள்ளிட்ட செயல்களின் மூலம் அவர் அரசியலில் ஈடுபடும் மன நிலையில் உள்ளதை வெளிப்படுத்தியது. இந்நிலையில், சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வருகிற லோக்சபா தேர்தல் தொடர்பாக அவர்களுடன் விஜய் பேசியுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார் விஜய். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். சுமார் 2மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுது்த வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை முதலில் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் கட்சியை பதிவு செய்து விட்டு அதன் பின்னர் அறிவிப்புகளை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஒரு மாதகாலத்தில் தனது மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!