"வார் ரூம்" ரெடி.. கர்நாடக தேர்தலின் "ஹீரோ" சசிகாந்த் செந்தில் தலைமையில்.. காங்கிரஸ் அதிரடி!

Jan 06, 2024,06:45 PM IST

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு போர் வேகத்தில் தயாராக ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் கட்சி. சசிகாந்த் செந்தில் தலைமையில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.


சசிகாந்த் செந்திலை யாரும் மறந்திருக்க முடியாது.. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அட்டகாசமான வெற்றியைத் தேடிக் கொடுக்க தீவிரமாக உழைத்தவர்தான் சசிகாந்த் செந்தில்.


முன்னால் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடகத்தில் பணியாற்றியவர். பின்னர் தனது வேலையை விட்டு விட்டு காங்கிரஸில் இணைந்தார். இவரது தலைமையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிரடி காட்டியது.




கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிரசார உத்திகள், ராகுல் காந்தியின் பிரசார உத்தி உள்ளிட்டவற்றை வகுத்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து அழகாக வடிவமைத்தது செந்தில் தலைமையிலான குழுதான். பாஜகவின் பல்வேறு அஸ்திரங்களையும் தகர்த்து இந்தக் குழு அமைத்துக் கொடுத்த வியூகத்தால்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை கர்நாடகத்தில் பெற முடிந்தது.


தற்போது சசிகாந்த் செந்திலின் பணியை மிகப் பெரிய அளவுக்கு மாற்றியுள்ளது காங்கிரஸ் மேலிடம். அவரை லோக்சபா தேர்தலுக்கான வார் ரூம் தலைவராக நியமித்துள்ளால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.  அதாவது நாடு முழுமைக்குமான உத்திகளை வகுக்கும் மிகப்பெரிய பொறுப்பு சசிகாந்த் செந்தில் டீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.


நிர்வாக வார் ரூம் மற்றும் தகவல் தொடர்பு வார் ரூம் என இரு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதில் நிர்வாக வார் ரூமின் தலைவராக சசிகாந்த் செந்தில் செயல்படுவார். தகவல் தொடர்பு வார் ரூமின் தலைவராக வைபவ் வாலியா செயல்படுவார்.


சசிகாந்த் செந்தில் குழுவில், கோகுல் புடையில், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் துணைத் தலைவர்களாக செயல்படுவார்கள்.


சசிகாந்த் செந்தில் தலைமையில் மத்திய வார் ரூம் அமைக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்