Loksabha Election results: தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தது.. ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படுகின்றன!

Jun 04, 2024,09:05 AM IST

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குககளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அது முடிந்து தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.


மக்களவைத் தேர்தலில்  பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்படவுள்ளன. சென்னையில் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி ஆகிய மையங்களில் வாக்குககள் எண்ணப்படுகின்றன.


வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணப்பட்டு உரிய ஒப்புதல் பெற்ற பிறகு அதன் முடிவு வெளியிடப்படும். 


ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க 272 எம்.பிக்கள் தேவை. அந்த எண்ணிக்கையைப் பெறும் கட்சியோ அல்லது கூட்டணியோதான் ஆட்சியமைக்க முடியும். இந்த மாஜிக் எண்ணைப் பெறப் போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி போட்டியில் உள்ளன.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணி, 3வது அணியாக பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டுள்ளன.


அம்பாசமுத்திரத்தில் ஸ்டிராங் ரூம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே போன அதிகாரிகள்


2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தொகுதியாக உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 10 லட்சத்து 60 ஆயிரத்து 461 பேர் தங்கள் வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு இவிஎம் மிஷின்கள் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்பட்டன.


இந்த  அறையின் முன்பு கடந்த ஒன்றரை மாதமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில்,  சட்டமன்றத் தொகுதி வாக்குப்பெட்டி உள்ள பகுதிக்கு முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்தது. இந்நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு நிலவு வரும் சூழலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

 

முன்னேற்பாடுகளை பொறுத்தவரை மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணும் பணிக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக தலா 51 பணியாளர்கள் வீதம் மொத்தம் 306 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில்  ஈடுபடுத்த பட உள்ளனர். மொத்தம் 22 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மேலும், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்