ஏங்க, இந்தப் பக்கம் சிறுத்தை போனதைப் பார்த்தீங்களா.. மயிலாடுதுறையில்... 8வது நாளாக தேடும் பணி!

Apr 10, 2024,05:54 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை இன்று வரை பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். சிறுத்தையை தேடும் பணி 8வது நாளாக நீடித்து வருகிறது. தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்க வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.


மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர் . மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என  தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தனர். காவிரி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 19 கேமராக்கள் வைத்து சிறுத்தையின்  நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.




இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணி இன்றுடன் 8வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை சிறுத்தை கண்ணில் தென்படவில்லை. பொதுமக்கள் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளனன. ஆனால் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.


பல இடங்களில் சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுத்தையை கண்டறிய கோவை wwf india நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன்  களமிறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர்.சிறுத்தையைப் பிடிக்க டிரோன் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சிறுத்தை அந்த ஊர் மக்களிடையே போக்கு காட்டி இன்று வரை சிக்காமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


இதற்கிடையே, சிறுத்தை மயிலாடுதுறைக்குள் இருக்க வாய்ப்பில்லை என்றும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்