மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி பேரணியைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்பை மெரைன் டிரைவ் பகுதியிலும், வாங்கடே மைதானத்திலும் குழுமியதால் அந்தப் பகுதி முழுவதும் மனிதத் தலைகளாக காணப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தி கோப்பையை வென்றது. இது இந்தியாவுக்கு 2வது டி20உலகக் கோப்பையாகும். ஒட்டுமொத்தமாக நான்காவது கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார். இதையடுத்து மும்பைக்கு இந்திய அணி கிளம்பியது. மும்பை வாங்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மெரைன் டிரைவ் பகுதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சிறப்பு பஸ் மூலமாக இந்திய அணியினர் வாங்கடே மைதானத்திற்குப் பேரணியாக செல்லவுள்ளனர்.
இந்திய அணியினரை பார்க்கவும், அவர்களை வரவேற்கவும், வாழ்த்தவும் இன்று பிற்பகலிலிருந்தே ரசிகர்கள் மெரைன் டிரைவ் பகுதியில் குவிந்து விட்டனர். லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் கடலே வெட்கப்படும் அளவுக்கு அலை கடலென மனிதத்தலைகளாக மாறியிருந்தது மெரைன் டிரைவ் பகுதி. அதேபோல வாங்கடே மைதானத்திற்குள்ளும் லட்சம் ரசிர்கள் குழுமியுள்ளனர்.
இந்திய அணி ஒராண்டுக்கு முன்பு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்லத் தவறியது. இதனால் ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிப் போயிருந்தன. இந்த நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருப்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால்தான் இன்று இந்திய அணியை வரவேற்க வரலாறு காணாத அளவில் திரண்டுள்ளனர்.
வாங்கடே மைதானத்தில் இன்று இன்னொரு வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது. இதே மைதானத்தில்தான் கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யாவுக்கு எதிராக வன்மத்தைக் கக்கினர் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள். ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால் வந்த கோபம் அது. ஆனால் இன்று மைதானம் முழுக்க ஹர்டிக் பாண்ட்யா என்று அவரது பெயரை ரசிகர்கள் உற்சாகத்துடன் உச்சரித்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல ஹர்டிக் பாண்ட்யாவின் அட்டகாசமான பவுலிங்தான் காரணம் என்பது நினைவிருக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}