பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் The Order Of Mubarak Al Kabeer உயரிய விருது!

Dec 22, 2024,04:46 PM IST

குவைத் சிட்டி: குவைத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி பெறும் 20வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டின் நைட் விருது போல, இந்தியாவின் பாரதரத்னா விருது போல குவைத் நாட்டின் உயரிய விருதுதான் The Order Of Mubarak Al Kabeer விருது. அந்த விருதுதான் தற்போது பிரதமர் மோடிக்குத் தரப்பட்டுள்ளது.


வெளிநாட்டுத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் போன்றோருக்கு மட்டுமே இந்த விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படும்.  இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து அரசர் சார்லஸ் போன்றோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.




குவைத் நாட்டின் பாயன் அரண்மனையில் நடந்த விழாவின்போது பிரதமர் மோடிக்கு விருது அளிக்கப்பட்டது. குவைத் நாட்டின் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபர் அலி சபா விருதினை வழங்கிக் கெளரவித்தார். 2 நாள் பயணமாக குவைத் வந்துள்ளார் பிரதமர் மோடி. கடந்த 43 ஆண்டுகளில் குவைத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.


முன்னதாக ஷேக் சசாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தியர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர் இந்தியர்கள்.  நேற்று ஸ்பிக் பணியாளர்கள் முகாமுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்