குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024: அஞ்சாத சிந்தனைகள் கொண்ட கடக ராசி அன்பர்களே!

Apr 05, 2024,05:47 PM IST

மனதில் இனம் புரியாத சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். நினைத்த பணிகளை செயல்படுத்தும் போது ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது கவனம் வேண்டும். 


விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். செய்த முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். வர்த்தக வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. நிதானமான முயற்சிகள் காரிய அனுகூலங்களை உண்டாக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளும் இலக்குகளும் பிறக்கும்.


வியாபாரிகளுக்கு:




வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அலைச்சலுக்கு பின்னே நினைத்த காரியங்கள் கைகூடும். வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். பழைய பாக்கிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய கிளைகள் சார்ந்த பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். மருத்துவத்துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். இரசாயனம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள்.


உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகத்தில் இருந்த பதற்றங்கள் படிப்படியாக குறையும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாடு செல்வதற்கான சூழல் உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். சில முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை தவிர்ப்பது நன்மதிப்பை உண்டாக்கும்.

கலைஞர்களுக்கு:


கலைத்துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். புதிய மாற்றம் உண்டாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும்.


அரசியல்வாதிகளுக்கு:


முன் கோபம் இன்றி செயல்படவும். நண்பர்கள் இடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். தன்னம்பிக்கையுடன் செயல்படவும். கட்சி மேலிடத்தில் எதிர்பார்த்த ஆதரவுகள் சாதகமாகும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் கவனம் வேண்டும். வழக்குகளில் இருந்த அலைச்சல்கள் குறையும்.


பெண்களுக்கு:


குடும்ப விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நன்று. அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி சாதகமாக அமையும். குழந்தைகள் இடத்தில் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்ட சொந்த வேலைகளை முடிப்பீர்கள்.


மாணவர்களுக்கு:


கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் சில மாற்றங்களை உண்டாக்கும். வெளியூர் சார்ந்த சில பயணங்கள் கைகூடும். அரசு உதவிகளில் தாமதம் ஏற்படும்.


வழிபாடு:


துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய செயல்களில் இருந்த தடை தாமதங்கள் விலகும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்