சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தவண்ணம் இருப்பதால் அவர் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே உள்ளது.
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அங்குதான் இறுதிச் சடங்குகளும், நல்லடக்கமும் நடைபெறவுள்ளது. இதையடுத்து தற்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என சாரை சாரையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு பகுதி முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுமக்கள் கண்ணீருடனும், அழுது புலம்பியபடி கோயம்பேட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தபடி அழுது புலம்பிக் கொண்டு போவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.
கோயம்பேடு பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிவதாலும், வாகனங்கள் குவிவதாலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இப்பகுதியில் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}