அட்டை பெட்டியில் வழங்கப்பட்ட சிசுவின் சடலம்.. KMC பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்!

Dec 11, 2023,05:44 PM IST

சென்னை: அட்டை பெட்டியில்  வைத்து குழந்தையின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


ஒட்டுமொத்த மனங்களையும் சிதறடிக்கும் வகையிலான சம்பவம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்து அனைவரையும் பதறச்  செய்தது. அந்த சம்பவத்திற்குக் காரணமான நபர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி செளம்யா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். மிச்சாங் புயலின் போது அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டது. நாலாபக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீர் அதிகளவில் சூழ்ந்திருந்த காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸுக்கு போன் போட்டும் லைன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டிலேயே குழந்தை பிறந்தது.




குழந்தையின் தொப்புள் கூட எடுக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செளம்யாவை அனுமதிக்க மறுத்துள்ளனர். பின்னர் போலீஸ் தலையீட்டின் பேரில் இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்து செளம்யாவுக்கு மட்டும் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளனர். பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தந்தை மசூத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.


அங்கு நடந்ததுதான் மிகப் பெரிய கொடுமை. இதுகுறித்து மசூத் கூறுகையில், எனது குழந்தை இறந்து விட்டது என்று கூறி அட்டைப் பெட்டியில் போட்டு மார்ச்சுவரியில் கொடுன்னு சென்னாங்க. நானும் கொண்டு போய் கொடுத்தேன். மறு நாள் ஆதார் கார்டு கொண்டு வரச் சொன்னாங்க. ஆதார்டு கார்டை கொடுத்துட்டு குழந்தையை அதே  அட்டை பெட்டியில போட்டு தான் கொடுத்தாங்க என்றார். அவர் அட்டைப் பெட்டியைத் தாங்கியபடி வந்த காட்சி தமிழ்நாட்டையே அதிர வைத்து விட்டது.


இவ்வளவு அலட்சியமாக அரசு மருத்துவமனை, அதிலும் தலைநகர் சென்னையில் உள்ள மிகப் பிரபலமான கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நடக்கலாமா என்ற பெரும் விமர்சனம் எழுந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு, குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் போட்டு வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரம் வரை பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் தொடரும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்