கோழிக்கோடு : கேரளாவில் ஜீப் கவிழ்ந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களான 9 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேரளாவின் வயநாது மாவட்டம் தாளப்புழாவில் உள்ள கன்னோத் மலைப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் பணியாளர்கள், வேலை முடித்து ஜீப்பில் வீடு திரும்பி உள்ளனர். இந்த ஜீப் மானந்தவாடி என்று பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஜீப் மொத்தமாக நொறுங்கி உருக்குலைந்து போனது.
மாலை 04.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான ஜீப்பில் டிரைவர் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}