ரயில் விபத்துக்கள் தொடர் கதையாகி விட்டன.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

Oct 12, 2024,05:26 PM IST

சென்னை:   ரயில் விபத்துக்கள் நாடு முழுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த கோர விபத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.




விபத்து நடந்த இடத்தில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தடம் புரண்ட 8 பெட்டிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இன்னும் 3 பெட்டிகளை எடுக்க வேண்டியுள்ளது. அந்த பெட்டிகளை கிரேன்கள் மூலம் தூக்கி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் விபத்தில் காயமைடந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைச்சர் நாசர், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் மீட்புபுப் பணிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 22 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிப்பு இல்லாதது மகிழ்ச்சி தருகிறது.


ஸ்டான்லி மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம், மருத்துவ குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் போதிய அளவில் உள்ளனர். முதல்வரும் மீட்புப் பணிகளை இதை கண்காணித்து மேற்பார்வையிட்டு வருகிறார்.


நாட்டில் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாகி வருகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துரோகம் உள்ளே நுழைந்ததால்.. அதலபாதாளத்திற்குப் போய் விட்டது அதிமுக.. சொல்கிறார் ஓபிஎஸ்

news

சென்னையில் வைத்து.. இந்தி வார கொண்டாட்டமா.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

news

பட்டி தொட்டியெங்கும் சிலாகிக்கப்படும்.. சிலாஞ்சிறுக்கி.. மகிழ்ச்சியில் மினி நா. முத்துக்குமார்!

news

த.வெ.க. வேற மாதிரி.. எந்தப் பதவியும் நிரந்தரமல்ல.. உழைப்புக்கே மரியாதை.. புஸ்ஸி ஆனந்த்

news

22ம் தேதி உருவாகப் போகும்.. காற்றழுத்த தாழ்வால்.. நமக்கு பெரிய மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை... உயர்விற்கு இது தான் காரணமாம்!

news

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

news

உங்களுக்குத்தாண்டா அது பிரமிடு.. விறுவிறுவென ஜிசா பிரமிடு மீது ஏறி .. ஜாலியாக விளையாடிய நாய்!

news

மீண்டும் நனைந்த சென்னையில்.. அடுத்த 2 மணி நேரத்திற்கு.. லேசான மழைக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்